Saturday, November 26, 2016

ஆலயதரிசனம் நவம்பர் 2016 மாத இதழ் திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள் அட்டை படத்துடன்......
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam

Thursday, October 27, 2016

ஆலயதரிசனம் அக்டோபர் 2016 மாத இதழ் தீபாவளி சிறப்பிதழாக மலர்கிறது.

ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam

Monday, August 22, 2016

ஆலயதரிசனம் ஆகஸ்ட் 2016 இதழ்........ ராதே கிருஷ்ணா .......



















மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள். https://www.facebook.com/aalayadharisanam ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும் இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD

Monday, July 18, 2016








ஆலயதரிசனம் ஜூலை 2016 இதழ் வெளிவந்துவிட்டது.
இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா ? - தலையங்கம்
வைணவ நெறிப்படி திருமண வரவேற்பு
எது மூட நம்பிக்கை ? சத்சங்கம் கேள்வி பதில் பகுதி
இன்னும் பல சுவையான செய்திகளுடன்.....
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam

Wednesday, June 22, 2016

ஆலயதரிசனம் ஜூன் மாதம் 2016

ஜூன் மாத 2016 ஆலயதரிசனம் வெளிவந்துவிட்டது , கேதாண்டப்பட்டி ஆராவமுதப் பெருமாள் - சிறப்பு தரிசனத்தோடு......
தொண்டா தொழிலா ? - தலையங்கம்
வைணவ நெறிப்படி நிச்சயதார்த்தம் செய்வது எப்படி ?
இன்னும் பல சுவையான செய்திகளுடன்.....
ஆண்டுச் சந்தா வெறும் ரூபாய் 200/- மட்டும்
இதழை Subscribe செய்ய http://goo.gl/4B5HlD
மேலும் அன்றாட வைணவச் செய்திகள் / பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam

Sunday, May 15, 2016

வேறு வழி..............தலையங்கம்





ஆலயதரிசனம் மே 2016 மாத இதழிலிருந்து................   

தேர்தல் வந்துவிட்டது.
மே 16 - வாக்குப்பதிவு. மே 19 வாக்கு எண்ணிக்கை. அடுத்து 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போகிறவர்கள் (?!) யார் என்று தெரிந்து விடும் என்பதைத்தவிர, புதிய விஷயங்கள் எதுவும் மக்களுக்காக நடந்து விடப்போவதில்லை.
    ஒரு திருவிழா போல ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் இத்தேர்தலில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது புதிய நம்பிக்கை என்று பல தேர்ந்த அரசியல் விமர்சகர்கள் சொல்லுகிறார்கள்.
    அரசியல் என்பது தொண்டு என்கிற காலம் மலை ஏறிப்போய் தொழில் என்று ஆகிவிட்டது. தொண்டு என்பது எல்லோராலும் செய்ய முடிந்தது. தொழில் என்பது முதலீடு உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடிந்தது.
    இன்று பல கோடி ரூபாய் செலவு செய்து தொண்டு செய்ய அரசியல்வாதிகள் துடிக்கும் துடிப்பு வியக்க வைக்கிறது.
    தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் வாதப்பிரதிவாதங்கள் சூடு பறக்கின்றன. எந்தக் குற்றச்சாட்டையும் சிரித்துக் கொண்டே மறுக்கிறார்கள்.
    அரசியல்வாதிகள் - மோசமானவர்கள் - சுரண்டல் பேர்வழிகள் - எங்களைத்தவிர என்று ஒவ்வொரு அரசியல் கட்சிக்காரர்களும் முழக்கமிடுகிறார்கள்.
     பொதுமக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே - என்கிற பயமெல்லாம் கொஞ்சம்கொஞ்சமாகப்  போய்விட்டது.
    படித்தவர்கள் சூதும் வாதும் செய்தால் என்று பதறினான் பாரதி. இன்று பல அரசியல்வாதிகள் அதிகம் படித்தவர்கள்.
    மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது ஜனநாயகத்தின் சிறப்பு என்பது உண்மைதான்.
    ஆனால்,
    தாங்கள் விரும்பியவர்களையோ - இவர்கள் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களையோ தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
    ஒவ்வொரு அரசியல் கட்சியும் நிறுத்தும் வேட்பாளர்களில் யாரோ ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.
    சுயேச்சையாகவும் நிற்கலாம் என்பது ஓர் ஒப்புக்கான ஏற்பாடுதான்.
    ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் வென்றாலும் விலைபோய்
விடும் காட்சியையும் பார்க்கிறோம்.
    ஜனநாயக ஆட்சியில் -
    அரசாங்கத்துக்குக் கடனும், அரசாங்கத்தை நடத்துபவர்
களுக்கு நாளுக்கு நாள் சொத்து சேர்வதும் ஜனநாயகத்தின் மாட்சியா வீழ்ச்சியா?



(சென்ற தேர்தலைவிட இத்தேர்தலில் பல அரசியல்வாதிகளின் சொத்துக்கணக்கு பன்மடங்கு பெருகியிருக்கிறது. இது அவர்களே கொடுத்த கணக்கு).
    ஒரு வேலை இல்லை. ஒரு தொழில் இல்லை. ஒரு முதலீடு இல்லை.
    கட்சியின் சாதாரணப் பதவியில் உள்ள ஒருவர் வெள்ளையும் சள்ளையுமாக - 16 லட்சரூபாய் காரில் பறப்பதைப் பார்ப்பவர்களுக்கு - அரசியல் ஆசை வரத்தானே செய்யும்!
    நம் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன்.
   "இன்று மக்கள் ஓரளவு நன்றாகத்தானே இருக்கின்றார்கள். பணப்புழக்கம் இருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. அப்ப
டியே இல்லாவிட்டாலும், 20 கிலோ அரிசி இலவசம். இப்படி அரசாங்கம் பார்த்துப் பார்த்து செய்கிறதே...."
    அப்போது அவர் சொன்னார்.
    தினசரி 100 ரூபாய் கிடைக்காதவர்கள் - ஒரு வேளை சாப்பாடு கிடைக்காதவர்கள் எத்தனை லட்சம் தெரியுமா? அமர்வதற்கு ஒரு வீடும், முகவரியும், ரேஷன் அட்டையும் இல்லாதவர்கள் எத்தனைபேர்
தெரி
    உண்மைதான்.
    தமிழ்நாட்டில் மட்டும் படித்த பலரும் (சுமார் 1 கோடி) வேலையில்லாமலிருக்கிறார்கள். சிலருக்கு வேலை என்று ஒன்று இருக்கிறதே தவிர, வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
    எதிர்த்த வீட்டுப்பையன் பி.இ., படித்து விட்டு மாதம் 40,000 ரூபாய் சம்பாதித்து சௌகரியமாக இருக்கிறான் என்று, தன்னிடம் இருக்கும் தனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த முக்கால் ஏக்கரையும் விற்றுப் படிக்கவைத்து விவசாயி மாதம் 6,000 ரூபாய்க்கு அல்லாடும்
போது விற்ற நிலத்துக்கு வருந்துவதா வாங்கிய வட்டிக்கு வருந்துவதா என்று தெரியவில்லை. சுயதொழிலுக்கான வாய்ப்போ, திறமையோ, சிந்தனையோ ஊக்கமோ யாரிடமும் இல்லை. அப்படி ஒரு படிப்பு - சூழல்!
    தொழில் செய்பவர்களே தொடர்ந்து தொழில் நடத்தத் தயங்கும் சூழல்!
    கள யதார்த்தங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு குளிர்சாதனஅறையில் கம்பீரமாக அமர்ந்து கதையளக்கும் அரசியல்வாதிகள் வானத்தை வில்லாக வளைப்பதாக நாக்கூசாமல் சொல்லும்போது வேதனை கலந்த சிரிப்புதான் வெளிப்படுகிறது.
    என்னென்ன செய்வேன் என்நு சொல்கிறார்களே தவிர எப்படிச் செய்வேன் என்று யாரும் சொல்வதில்லை.
    அப்படிச் சொன்னால் இதுவரை ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழும் அல்லவா!
    இதற்கெல்லாம் காரணம், ஆன்மிக வறட்சிதான். பாவ புண்ணியங்
களைப் பற்றிய புரிதல் இன்மைதான். ிஐயோ! இது பாபமல்லவா!ீ என்ற குற்ற உணர்வு இல்லாமைதான்!
    நம் பாரததேசத்தில் - குறிப்பாக - நம் தமிழ்நாட்டில் அறம் சார்ந்த வாழ்க்கையே வாழ வலியுறுத்தி ஆன்றோர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள்.
    தெய்வ பக்தி என்பது ஒழுக்கத்தோடு தொடர்புடையது. ஒழுக்கம் சார்ந்த வாழ்வுதான் அறவாழ்வு!
    தர்மம் ஒருவனை வழி நடத்தும். காப்பாற்றும்.
    இன்று தர்மம் அடிபட்டு அலங்கோலமாகக் கிடக்கிறது.
    முளைக்காத விதைகள் போல - மனத் தூய்மையற்ற ஆடம்பர பக்திதான் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது.
    நன்மைகள் பலமடைந்தால் தவிர, தீவினைகள் அகல்வதற்கு வழியில்லை.
    அப்படியானால், இன்றைய தேர்தல்களும் ஜனநாயகமும் பொருளற்றவைதானா என்று கேட்கலாம்.
    பாரதிதாசன் அருமையான ஓர் பாடலை எழுதினார்.
    வயது முதிர்ந்த மனைவி பற்றி ஓர் முதியவர் பாடுவது.
    குழி விழுந்த கண்கள் -
    நரைத்த தலை -
    சுருக்கிய தோல் -
    தளர்ந்த நடை -
    இப்படி இருக்கும் என் மனைவி குறித்து எனக்குச் சந்தோஷம்
தான். என்ன சந்தோஷம் என்றால் உயிருடன் இருக்கிறாளே என்கிற சந்தோஷம்தான் என்பார்.
    அதேதான் நம் தேர்தல் நடைமுறைகளிலும்! எத்தனை சிக்கல்கள் - இருப்பினும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற முடிகிறதே - அந்த அளவுக்கு ஜனநாயகம் இருக்கிறதே!
    நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
    அடுத்து ஐந்தாண்டு நம்மை ஆளப்போகிறவர்களை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்!
    அவர்கள் ஆள்வார்கள்.
    நாம் ஆளப்படுவோம்!
    ஆன்மிகம் இங்குதான் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இனி நம்மை பகவான்தான் காப்பாற்ற வேண்டும். வேறு யார் காப்பாற்ற முடியும்? அவனைச் சரணடைவோம்!

Monday, March 28, 2016

ஆனந்தரங்கம்பிள்ளை - புதுச்சேரி பிரெஞ்ச் ஆட்சியாளர்களுக்கு துபாஷ்
(மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்).
அக்கால சரித்திர வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தன் பார்வையில் நாட்குறிப்புகளாக எழுதியவர். இவர் நாட்குறிப்புக்கள் மூலம் நாம் பல செய்திகளைத் தெரிந்து கொள்கிறோம். இச்செய்திகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு.
விலை ரூபாய் 150/- மட்டும் .
புத்தகத்தை V.P.P. யில் பெற உங்கள் முகவரியை 94422 90074 என்ற number க்கு SMS / WHATSAP செய்யுங்கள்.
சிறப்பு சலுகையாக இலவச POSTAGE + VPP charge


ONLINE இல் ORDER செய்ய  இல் செய்ய https://goo.gl/TThsWd

Saturday, March 19, 2016

அச்சு


  தலைப்பு இல்லாவிட்டாலும் தலைப்பை ஏற்படுத்திப் பேசுபவர்கள் உண்டு.
    தலைப்பு கிடைத்தாலும் தான்பாட்டுக்கு பேசுபவர்கள் உண்டு.
    ஓர் திறமையான இசைஅரங்கு . இசைவாணர் பாடிக் கொண்டிருந்தார் . நிகழ்ச்சியை நடத்துபவர்கள் பக்க வாத்தியத்திற்கு உள்ளூரில் உள்ள ஒரு பையனை ஏற்பாடு செய்திருந்தனர் .
    கச்சேரி முடிந்தபிறகு கேட்டனர்.
    ‘பையன் எப்படி?உங்கள் பாட்டுக்கு வாசிச்சாரா ?
     பாடகர் சொன்னார். என் பாட்டுக்கு வாசிக்கவில்லை. தன் பாட்டுக்கு வாசிச்சார்!.
    தலைப்பு கொடுத்துவிட்டு இன்ன தலைப்பில் பேகிறேன் என்று அறிவித்து தன் பாட்டுக்கு பேசுவர்கள் உண்டு. அவர்கள் தான் இன்று அதிகம்.
    அடியேனுக்கு அந்தத் துணிச்சல் இல்லை.
    எனவே தலைப்பைக் கேட்டேன்.
    தலைப்பு வேண்டுமா என்றார் ஆலி நாடன் ஸ்வாமி.
    ஆம். ஏதேனும் ஓர் மையம் - அச்சு - இருந்தால்தான் அதனை ஒட்டி பேச்சைச் சுழற்ற முடியும் என்றேன்.
    உடனே பிடித்துக்கொண்டார்.
   "அச்சு"   என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமே என்றார்.
    வம்பை விலை கொடுத்து வாங்குவது என்பது இதுதான்.
    நான் பாட்டுக்கும் திருநகரி மகாத்மியம் அல்லது திருமங்கை ஆழ்வார் வாழ்வும் வாக்கும் என்று பேசிவிட்டுப் போகலாம்.
    இப்போது தலைப்பு ’அச்சு’ ன்று ஆகி நச் என்று என்னை நசுக்கிவிட்டது.
        .....    .....    .....    .....    .....
    அச்சு என்றால் ஓர் மையம்.உருளை. இப்படி பல பொருள்.
    சக்கரத்திற்கு நடுவில் சக்கரம் சுற்றுவதற்கு ஆதாரமாக விளங்கு
வது அச்சாணி.
    எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நாம் நித்தியம் சொல்லும் ஸ்லோகம். வைணவ குரு பரம்பரைக்கு அச்சாணி.
    என்ன ஸ்லோகம்?
    லக்ஷ்மி நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
    அஸ்மதாசாரிய பரியந்தாம் வந்தே குருபரம்பராம்.
    முதல் அச்சு ஸ்வாமி நாதமுனிகள் அப்புறம் ஆளவந்தார்....
    நமது ஆசாரிய குலதிலகமான ஸ்வாமி நாதமுனிகள் வைணவ மரபுக்கு மையம் அல்லவா!
    கூரத்தாழ்வானின் ஞான தீட்சண்யம் அறிவுத்திறன் இந்த சுலோகத்தில்  வியக்கவைக்கும்.
    ஒரு ஸ்லோகம் எழுதினால், அதன் அர்த்தம் எத்தனை யுகங்களா
னாலும் பொருந்தி நிற்க வேண்டும்.
    இந்தச் சுலோகம் அப்படிப்பட்டது.
    லக்ஷ்மி நாதன்.  பகவானுக்கு ஸ்ரீநிவாஸன் என்று பெயர். திருமகள் நாதன். திருமால்.வெறும் மால் அல்ல.ஸ்ரீமந் நாராயணன்.
    நம் ஸம்பிரதாயத்தின் உயர்வு அப்படிப்பட்டது.
    நான் அலங்காரமாகப் பேசுபவன் அல்ல, நுட்பமாகப் பேசுபவன் அல்ல.  உள்ளது உள்ளபடி, உணர்ந்தது உணர்ந்தபடியும் உரைப்பவன்.
    இதிலே ஆசார்யன் பெருமை பேசப்படுகிறது.
    சிஷ்யன் பெருமை பேசப்படுகிறது.
    பிராட்டி பெருமை பேசப்படுகிறது.
    பகவான் பெருமை பேசப்படுகிறது.
    நாதயாமுனி மத்யமாம் இது தான் அச்சு.
    ஆசார்யரான நாதமுனிகளை அச்சாகக் கொண்டு ஸ்ரீவைஷ்வை சமயம் என்னும் சக்கரம் சுழல்கின்றது.
    நாதமுனி என்பது அவர் திருநாமம். அப்படி என்ன காரியம் செய்தார் என்று தோன்றும்.
    ஒருவருக்கு இருதயநோய். அடைப்பு வந்து விட்டது. பிழைப்
பாரா பிழைக்க மாட்டாரா என்பது தெரியாத நிலையில் ஓர் மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.
    டாக்டர் அருமையான டாக்டர்.
    தன் அபாரத் திறமை அத்தனையையும் பயன்படுத்துகிறார். சளைக்காமல் முயற்சி செய்கிறார்.  ஆபத்தான நோயாளியைக் காப்பாற்றி விடுகிறார்.
    ஸ்வாமி நாதமுனிகள் தான் அந்த டாக்டர்.
    வந்த நோயாளி போல்தான் ஸ்ரீவைஷ்ணவ சமயம் அன்றைக்கு இருந்தது.
    நின்று போன சக்கரத்தைச் சுழலவிட்டவர் நாதமுனிகள்.
    காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்கு
    தாளம் வழங்கி தமிழ் மறையின் இன்னிசை தந்த வள்ளல் நாதமுனிகள். எனவே முதல் அச்சு ஸ்வாமி நாதமுனிகள்.
        ......    .....    .....    .....    .....
    ஆனால் அந்த அச்சு (ஸ்வாமி நாதமுனிகள்) சுழல்வதற்கு அவ
ருக்கு ஒரு அச்சு தேவைப்பட்டது. அந்த அச்சுதான் கண்ணிநுண் சிறுத்
தாம்பு.
    திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாரின் பிரபந்தத்தைப் பிரகாசப்
படுத்தினார்.
    ஆனால் நாதமுனிகள் காலத்தில் பிரபந்தம் மறைந்திருந்தது. எப்படிப் பிரகாசப்படுத்தினார்? அதற்கு ஒரு அச்சு குடந்தைப் பாசுரம்.
    ‘ஆரா அமுதே‘  அழகான தமிழ்ச்சொல்.
    வடநாட்டிலே லோகசாரங்கர் என்றொரு முனிவர். வடநாடு வந்த ஒரு தேசாந்திரியிடம் கேட்டார்.
    தெற்கேயிருந்து அதாவது தமிழ்நாட்டிலே இருந்து வருகிறீர்களா என்ன விசேஷம் என்று.
    அவர் சொன்னார்.
" ஒரு விசேஷம் உண்டு. திருவாய்மொழி என்றொரு பிரபந்தம் ஏகமான புகழொடு பிரச்சாரமாகிறது...
    இதில் ஒரு பாட்டு சொல்லணும்!"
   "பாட்டு தெரியாது. ஆரம்பிக்கிற முதல் வார்த்தை அடிக்கடி காதில்விழும்!"
    "சொல்லும்!"
   "ஆராஅமுதே"  என்று அழகாகச் சொன்னார்.
    லோகஸாரங்கமுனிவர் துள்ளிக் குதித்து எழுந்தார். ஆஹா அபாரம்! ஆரா அமுது என்றால் ஆறிய அமுதும் உண்டோ! என்ன அற்புதம்!  என்ன அற்புதம்!
    அடியைப்பிடி என்பது போல அவருக்கு ஓர் அச்சு கிடைத்தது. பிடித்துக் கொண்டார். திருவாய்மொழியைத் தேடி தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார். !
    அச்சு பிடிப்பவரையும் தன் புள்ளிக்கு இழுக்கும்.
    அப்படித்தான் நாதமுனிகளை ஆரா அமுதே இழுத்தது.
    விறுவிறுவென்று விசாரித்துக் கொண்டு திருக்குருகூர் அதாவது ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிட்டார்.










    போலீஸ்காரர்கள் ஒரு துப்புகிடைத்தால் முழு வழக்கையும் விசாரித்து விடுவார்கள்.
    நாதமுனிகள் ஓர் ஆரத்தைப் பிடித்துக் கொண்டு மையப் புள்ளியை நோக்கி நடந்தார். அங்கே பராங்குசதாஸர் என்றொரு அடியவர். நம்மாழ்
வாரின் சீடரான மதுரகவியாழ்வார் குலத்தில் வந்தவர்.
    அவரிடம் விசாரிக்கிறார்.
    அவர் எனக்குத் தெரியவில்லை அனால் ஒரு விஷயம். எங்களுக்கு. மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு தெரியும். அதைப் பன்னீராயிரம் முறை பாராயணம் செய்தால் ஆழ்வார் தோன்று
வார் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்றார்
    நாதமுனிகள் ஊன் உறக்கமின்றி தமிழ்வேதத்தை மீட்டெடுக்க பன்னீராயிரம் முறை தவம் செய்தார்.
    சீடரைப்பிடித்தால் குருவைப்பிடிக்கலாம்.
    நாலாயிரப் பிரபந்தத்தின் அச்சு கண்ணிநுண் சிறுத்தாம்பு. நாதமுனிகள் பாடினார். குரு கிடைக்கிறாரா?    
                                                                                                                        - தொடரும்

Saturday, February 13, 2016

ஆலயதரிசனம் பிப்ரவரி 2016



இந்த இதழில்..........

 






















தலையங்கம்                   
கண்ணன் பிறந்தான்
கவிதை   
விபீஷணன் யார்?
ஸத் சங்கம் (கேள்வி பதில்)
இசையும் இன்னிசையும்
மனுதர்மம் என்னதான் சொல்கிறது?
பத்மஸ்ரீ டி.கே.ஸ்ரீநிவாஸன்
பச்சைவண்ணப் பெருமாள்
வாழ்வியல் சடங்குகள்   
பெரும்புதூர் கருணையங்கடல்
பெரிய உடையாரும் தசரதனும்   
அலகிலா விளையாட்டு

இதழை SUBSCRIBE செய்ய  http://goo.gl/4B5HlD

மேலும் அன்றாட வைணவச் செய்திகளுக்கு எங்கள் பேஜ் ஐ like செய்யுங்கள்.
https://www.facebook.com/aalayadharisanam