Saturday, January 1, 2011

எள் - ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.

ஆகார நியமத்தில் எள் சேர்க்கக்கூடாது என்பது சம்பிரதாயமாக இருக்கிறது. அதில் "எள்" உணவைப் பற்றி தனது கருத்துக்களை இங்கே தெரிவிக்கிறார் ஸ்ரீ ஆனந்த அம்ருத ராமாநுஜதாசர்.

இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுப்பு தெரிவிக்கலாம் காரண காரியங்களோடு!

    வைணவர்கள் அனுஷ்டானமும் ஆகார நியதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், ஆரம்பத்திலேயே கடுமையாக இருந்தால் பலரும் பயப்படுவார்கள். படிப்படியாக வலியுறுத்த  வேண்டும். குறிப்பாக எள் பற்றி அடியேன் கருத்து இது.

    மனிதனுக்கு தேவையானது எள். நல்ல எண்ணெய் என்று பெயர் எப்படி வந்தது? மற்ற எண்ணெய்களுக்கு எல்லாம் தலைப்பெயர் உண்டு. ஆமணக்கு: ஆமணக்கு எண்ணெய். தேங்காய்: தேங்காய் எண்ணெய். மணிலா: மணிலா எண்ணெய். இப்படி எல்லாம் தலைப்பு பெயர் உண்டு. ஆனால் நல்லெண்ணைக்கு கிடையாது. இதற்கு ஒரு செவிவழிச் செய்தி உண்டு.
    பாற்கடல் கடையும்போது மகாலட்சுமி வெளிப்பட்டார். அப்போது பகவான் ஒரு திருவிளையாடல் நடத்த உத்தேசித்து எள் செடி விதைத்திருந்த தோட்டத்தில் தம்மை மறைத்துக் கொண்டார்.
    லட்சுமி அந்தச் செடிகளை மிதித்துக் கொண்டு சென்று பெருமாளைத் தேடினார். அவள் எள்ளை மிதித்தபோது எண்ணெய் வெளிப்பட்டது. மகாலட்சுமி மிதித்ததால் நல்ல எண்ணெய் ஆனது. அந்த எண்ணெயுடன் கலந்த லட்சுமி அப்படியே ஓடிச் சென்று பெருமாளுடன் கலந்து விட்டாள். இதனால் லட்சுமி நல்லெண்ணெய்யில் குடி இருப்பதாக ஐதீகம். இதுவே தீபாவளி ஸ்நானம் செய்வதற்கு நல்லெண்ணெய் ஸ்நானம் மிகவும் முக்கியம்.
                                (தினமலரில் 5.11.2010  வெள்ளி இதழில் தொகுப்பு)


    எள்ளு இது கண்ணுக்கு ஒளியும் உடலுக்கு வெண்மையும் தரும். இரத்தப் பெருக்கை உண்டாக்கும்.
    திருமலையில் கொலு பஞ்சாங்கச் சிரவணம் நடக்கும். தோமாலை சேவைக்குப் பிறகு கொலு பேர மூர்த்தியை கருட மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பஞ்சாங்கம் படிப்பர். பின்பு வெள்ளிக்கிண்ணத்தில் எள்ளுப்பொடியையும், சர்க்கரையையும் கலந்த பிரசாதம் நிவேதனமாகும். எள்ளுப்பொடி பிரசாதம் புத்திர சந்தானத்தை அளிக்க வல்லதாம்.
    திருமலை வெங்கடாஜலபதிக்கே ஸ்ரீ ராமாநுஜர் எள்ளும் சர்க்கரையும் கலந்து பெருமாளுக்கு எள்ளுப்பொடி பிரசாதம் நிவேதனம் செய்யும் பொழுது நாம் ஏன் உபயோகிக்கக் கூடாது?

No comments:

Post a Comment