Saturday, January 1, 2011

செய்திகள் சில வரிகளில்......

    பழைய நெய்வேலி ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிப்பெருவிழா 17.12.2010 அன்று அதிகாலை 4.30 மணி அளவில் பரமபத வாசல் திறப்பு சிறப்பு நிகழ்ச்சியோடு நடைபெற்றது.
    காரைக்கால் பண்பலையில் காலை 6.10 மணிக்கு திருப்பாவை விளக்கவுரைகளோடு ஒலிபரப்பாகிறது. முதல் 1-10 பாசுரங்களுக்கு ஆலயதரிசன நிறுவன ஆசிரியரும், 10-20 பாசுரங்கள் வரை பேராசிரியர் ராஜகோபாலாச்சாரியாரும்,  21-30 பாசுரங்கள் வரை வரிச்சுக்குடி அரங்கநாதாச்சாரியர் ஸ்வாமிகளும் உரையாற்றுகின்றனர்.
    4.12.2011 மாலை கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஸந்நிதியில் ஆலயதரிசனம் நிறுவன ஆசிரியர் ஆஞ்சநேயர் ப்ரபாவம் குறித்து உரை நிகழ்த்த இருக்கிறார்.
    26.1.2011 அன்று திண்டுக்கல் தோப்பு ஸ்வாமி இல்லத்தில் நடைபெற இருக்கும் கூரத்தாழ்வார் திருநட்சத்திர விழாவில் ஆலய தரிசனம் நிறுவன ஆசிரியர் உரை நிகழ்த்த இருக்கிறார்.

    4.2.2011 வெள்ளிக்கிழமை திருநாங்கூர் பதினொரு கருடசேவை உற்சவம். இதனை ஒட்டி 5.2.2011 சனிக்கிழமை அன்று திருவெள்ளக்குளம் அண்ணன்பெருமாள்கோயில் திருமண மண்டபத்தில் கலியன் ஒலிமாலை 10 -வது மாநாடு சிறப்பாக நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக!

    கும்பகோணம் அய்யங்கார் தெரு, ( 17 வது தெரு) ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் மார்கழி 4,5 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. மார்கழி 5-ம் தேதி (20.12.2010) திங்கட்கிழமை மாலை ஆலயதரிசன நிறுவன ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணன் தூது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
    கள்ளக்குறிச்சி ஆர்ய வைஸ்ய சங்கம், திருவாய்மொழித் திருச்சபை, ஸ்ரீ வைஷ்ண கைங்கர்ய ட்ரஸ்ட் மற்றும் திருமகிழ்ந்தவல்லி திருப்பாவை பஜனைக்குழு ஆதரவில் 5.12.2010 அன்று காலை ஸ்ரீ மதி ஆசூரி.சுதா அவர்கள் பரகாலன் பைந்தமிழ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 2.1.2011 அன்று கடலூர் லட்சுமண ஸ்வாமிகள் மார்கழித்திங்கள் என்கிற தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்கள்.
    விருத்தாசலம் வைணவ சீலர் கூ.ஆறுமுகம் செட்டியார் - அலமேலு ஆகியோரின் சஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தம் 25.11.2010 வியாழக்கிழமை காலை பகவத் பாகவத ஆசிகளோடு சிறப்பாக நடைபெற்றது. தம்பதியர் வைணவக் கைங்கர்ய சீடர்களாய் நூறாண்டு வாழ்க என ஆலயதரிசனம் வாழ்த்துகிறது.
நாராயணீயம்
    வைகுந்த ஏகாதசி அன்று திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் அண்ணன் கோயில் திருமால் அடியார் குழாமும் சென்னை தி.நகர் ஸ்ரீ ஹரி பக்த பஜனை மண்டலியும் இணைந்து ஸ்ரீமந் நாராயணீயம் அகண்டபாராயணம் நடைபெற்றது. டாக்டர். பன்னீர்செல்வம், என். பழனிவேல் அறங்காவலர் குழுத்தலைவர், செலீமான், ரெங்காச்சாரி, சுந்தர்ராஜன், திருவேங்கடத்தான், ஸ்தலத்தார்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்.....
ஆக்கூரில் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி பன்னிரு ஆழ்வார்கள் திருவீதி உலா
    17.12.2010 அன்று வெள்ளிக்கிழமை பன்னிரு ஆழ்வார்கள் வீதி உலா ஸ்ரீ ஆண்டாள் வைணவ வழிபாட்டுப் பேரவை சார்பில் நடைபெற்றது. சிறப்புச் சொற்பொழிவும் அன்னதானமும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இப்பேரவை, இளைஞர்களுக்கு ஆன்மிக ஞானம் ஊட்டி வழிப்படுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
திருபுவனம் ஸ்ரீ மந் நடனகோபால நாயகி சுவாமிகள் குருபூஜை விழா
    நடனகோபால நாயகி குருபூஜை (167 - வது ஆண்டு) 17.12.2010 வெள்ளிக்கிழமை 9.00 மணிக்குச் சிறப்பாக திவ்யகேளி பிருந்தாவன பஜனையுடன் நடைபெற்றது.
    அம்மையப்பன் க.சு.பா. ஸ்ரீ கிருஷ்ண பஜனை மடத்தின் 109 -வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா 17.12.2010 அகண்ட ஸ்ரீ கிருஷ்ண ராம பஜனையுடன் நடைபெற்றது. தகவல்: கே.எஸ்.பலராமன், திருவாரூர்.
    கோவை ஸ்ரீ கருட சேவாஸ்ரம ட்ரஸ்ட் திருப்பாவை 12 -ம் ஆண்டு விழா 16.12.2010 முதல் 14.1.2011 வரை திருப்பாவை சேவா காலம், உபந்யாசம், சாளக்கிராம திருமஞ்சனம், புருஷ சூக்தம், நாராயண சூக்தம் போன்ற வேத பாராயணங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தகவல்: அப்பன் தேவராஜன் ஸ்வாமி, கோவை.
    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ வைணவ மாநாடு 108 வைணவ திவ்ய தேசங்கள் புத்தக வெளியீட்டு விழா 20.11.2010 சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளோடு பிற வைணவ அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
    சங்கராபுரம் அருகே ராவுத்தநல்லூர் சஞ்சீவிராயர் கோயிலில் 4.1.2011 அனுமத் ஜெயந்தி விசேஷமாகக் கொண்டாடப்
பட்டது. காலை திருமஞ்சனம், மாலை வெண்ணெய்காப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு: எ.ரங்கநாதன், பிரம்மகுண்டம்.
   

No comments:

Post a Comment