Saturday, January 1, 2011

உங்கள் உடல் நலம் , பஞ்ச சமஸ்காரம்

                                                          உணவே மருந்து

    நோய்கள் வருவதற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு.
    ஒன்று சுகாதாரமின்றி வாழ்தல்.
    இரண்டு உணவுப்பழக்க வழக்கங்கள்.
    வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மைகளோடு பராமரிப்பது என்பது வெறும் ஏட்டளவில் நின்று விட்ட காலமாகிவிட்டது.
    நல்ல தண்ணீரைப் பருகவும், நல்ல தூய்மையான காற்றைச் சுவாசிக்கவும் ஏராளமாகப் பணம் செலவழிக்கும் காலம் விரைவில் வரப்போவதாக விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்.
    அதிகம் படிக்காத மக்கள் கூட சுகாதார நிலையில் வாழ்கிறார்கள். ஏராளமாகப் படித்துத் தாராளமாகச் சம்பாதிக்கும் நம்மால் நகர்களில் சுகாதாரமான சூழலில் வாழ முடியவில்லை.
    சுற்றிலும் சேறு - குப்பைகள், கழிவு நீர், அங்கேதான் இடம் கிடைத்தது. சதுர அடி 1500 ரூபாய் போட்டு கட்டிடம் கட்டினார். உள்ளே தேவலோகம்போல் இருக்கிறது. வாசலை விட்டு இறங்கினால் ஒரே அழுக்கு.
  "நோய் நாடி நோய் முதல் நாடி" என்றார் வள்ளுவர்.
    செரிக்காத, உடலுக்குப் பொருத்தமில்லாத உணவுகள், சுற்றுச் சூழல் சீர் கேடான வாழ்க்கை.....
    இவற்றிலிருந்து விடுபட சிந்திக்காத வரை எப்படி உடல் நலம் பேண முடியும்?









பஞ்ச சமஸ்காரம் (நித்யானுஷ்டானம் செய்யும்போது.......)

    இப்போது தட்டிலில் உண்ணும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் பெரியோர்கள் உண்பதற்கு இலைகளை பயன்படுத்தச் சொன்னார்கள். இலையில் பல மருத்துவக் குணங்களும் உண்டு.
    உணவு பரிமாறுவதற்கு வாழையிலை, பலா இலை, மா இலை, புரசை இலை, புன்னை இலை, மந்தாரை இலை - ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள்.
    இலையைப் போடுவதற்கும் ஒரு முறை உண்டு.
    இடத்தை நன்கு சுத்தி செய்ய வேண்டும். அழுக்கான இடத்திலோ குப்பையைச் சேர்த்து வைத்து அதன் மீதோ இலையைப் போடக்கூடாது. அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. இறைவனுக்கு நிவேதனம் (கண்டருளச் செய்தல்) செய்ததையே சாப்பிட வேண்டும். தனித்துச் சாப்பிடக் கூடாது.
    "நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிடர் உடுக்கும் கூறையும் உண்ணும் சோறும் பாவம் செய்தன" என்கிறார் பெரியாழ்வார்.
    வாழையிலையைப் போடும் போது அதன் அடி வலப்புறம் பொருந்தும்படி போட வேண்டும்.
    இலையில் பிரசாதம் படைக்கும் பொழுது, முதலில் பருப்பு, காய்கறி பின்பு பிரசாதம் நெய் படைக்க வேண்டும்.
                        - தொடரும்.

No comments:

Post a Comment